Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காக்கிச் சட்டை ஆசை ஜெய்யையும் விட்டுவைக்கவில்லை!
சென்னை: முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் முதன்முறையாக போலீஸ் வேடமேற்று நடிக்கவிருக்கிறார் ஜெய்.
'பகவதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய் தொடர்ந்து சுப்ரமணியபுரம், சென்னை 28, எங்கேயும் எப்போதும், கோவா, ராஜா ராணி போன்ற ஹிட் படங்களில் நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஜெய் நடிப்பில் வெளியான புகழ் திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறத்தவறி விட்டது.
இந்நிலையில் 'முண்டாசுப்பட்டி' புகழ் ராம் இயக்கும் அடுத்த படத்தில், முதன்முறையாக ஜெய் போலீஸ் வேடமேற்று நடிக்கவிருக்கிறார்.
சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் களைகட்டி வருவதால், தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்திற்கான நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இது முடிந்தவுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'சென்னை 28 படத்தின் 2 வது பாகத்தில் ஜெய் நடிக்கவுள்ளார்.
என்னை அறிந்தால், தெறி படங்களில் அஜீத், விஜய் இருவரும் போலீஸ் வேடமேற்று நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது ஜெய்யும் இணையவிருக்கிறார்.
தனது 14 வருடங்களுக்கும் மேலான திரை வாழ்க்கையில் போலீஸாக, ஜெய் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.