Don't Miss!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நான் இறந்துவிட்டதாக எனக்கே மெஸ்ஸேஜ் வருகிறது: நடிகர் ஜெயராம்
ஜீப் விபத்தில் சிக்கவில்லை என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்
கொச்சி: நடிகர் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இயற்கையின் முன்னால் எல்லோரும் சமம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் கேரள வெள்ளம். வெள்ளப் பாதிப்பு ஏழை பணக்காரன் ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் ஏற்பட்டது. அதில் திரைத்துறையினரும் பாதிக்கப்பட்டனர்.
நடிகர் ஜெயராமின் குடும்பம் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. தற்போது எஸ்டேட் தொழிலாளர்களுடன் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிவப்பு நிற லேண்ட் க்ரூசர் ஜீப்பை பள்ளத்திலிருந்து வேகமாக மேலே ஏற்ற முயற்சிக்கிறார் ஜெயராம். வேகமாக மேலே ஏறிவரும் ஜீப் ஒரு கட்டத்தில் ஏறமுடியாமல் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று மரத்தில் மோதுகிறது. அதில் ஜீப்பின் பின்னால் இருந்த பெட்டிகள் தூக்கி வீசப்படுகின்றன.
இந்த விபத்தில் ஜெயராம் உள்பட ஜீப்பில் பயணித்தவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறி வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஜெயராம், அந்த ஜீப்பை அவர் இயக்கவில்லை என்றும், அது ஒரு மாதத்திற்கு முன்பு தாய்லாந்தில் நடந்த விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இறந்துவிட்டதாக அவருக்கே தகவல் வருவதாகவும், நான் நலமுடன் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.