Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் இறந்துவிட்டதாக எனக்கே மெஸ்ஸேஜ் வருகிறது: நடிகர் ஜெயராம்
ஜீப் விபத்தில் சிக்கவில்லை என நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்
கொச்சி: நடிகர் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இயற்கையின் முன்னால் எல்லோரும் சமம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் கேரள வெள்ளம். வெள்ளப் பாதிப்பு ஏழை பணக்காரன் ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் ஏற்பட்டது. அதில் திரைத்துறையினரும் பாதிக்கப்பட்டனர்.
நடிகர் ஜெயராமின் குடும்பம் ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. தற்போது எஸ்டேட் தொழிலாளர்களுடன் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிவப்பு நிற லேண்ட் க்ரூசர் ஜீப்பை பள்ளத்திலிருந்து வேகமாக மேலே ஏற்ற முயற்சிக்கிறார் ஜெயராம். வேகமாக மேலே ஏறிவரும் ஜீப் ஒரு கட்டத்தில் ஏறமுடியாமல் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று மரத்தில் மோதுகிறது. அதில் ஜீப்பின் பின்னால் இருந்த பெட்டிகள் தூக்கி வீசப்படுகின்றன.
இந்த விபத்தில் ஜெயராம் உள்பட ஜீப்பில் பயணித்தவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறி வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள ஜெயராம், அந்த ஜீப்பை அவர் இயக்கவில்லை என்றும், அது ஒரு மாதத்திற்கு முன்பு தாய்லாந்தில் நடந்த விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இறந்துவிட்டதாக அவருக்கே தகவல் வருவதாகவும், நான் நலமுடன் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.