Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் அவரின் குடும்பத்தாரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரளாவில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மாநிலத்தில் உள்ள 33 அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வெள்ளக்காடானது கேரளா.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நடிகர் ஜெயராம், அவரின் மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோர் நிலச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
ஜெயராம் தனது மனைவி மற்றும் மகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கிரமாப் பகுதியில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய ஜெயராமின் கார் செயல் இழந்தது. இது குறித்து தகவல் அறிந்த வடக்கன்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயராம் குடும்பத்தாரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தன் குடும்பத்தை காப்பாற்றிய போலீசார் மற்றும் முதல்வருக்கு ஜெயராம் நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜெயராம் தொடர்ந்து உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.