Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா
சென்னை: ஈழத் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தால் சிலருக்குப் பிடிக்காது. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாதல்லவா என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு வீடு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இங்குள்ள சிலரது எதிர்ப்பு நிலை அறிந்து, பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இந்த செய்தி வெளியானதுமே, ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். குறிப்பாக சமூக வலைத் தளங்களில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோரை கடுமையாகக் கண்டித்து கருத்து எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் மாப்பிள்ளை விநாயகர், ஆரம்பமே அட்டகாசம் படங்களின் ஹீரோ நடிகர் ஜீவா தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்:
இலங்கை தமிழ் மக்களிடம் பணமாக ,நன்கொடையாக வாங்கியே பழக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு போரில் பாதிக்கபட்டமக்களுக்கு வேறு யாரவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது.
காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது. ஈழம் பேசும் அரசியல்வாதிகளில் சிலர் அந்த மக்களை சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதை பலமுறை நான் சந்தித்தபோது இலங்கை தமிழ்மக்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.. .தைரியம் இருந்தால் அந்த மக்களின் பணத்தை நாங்கள் வாங்கியதில்லை என்று இதுபோன்ற கட்சிகள் சொல்லட்டுமே பார்க்கலாம்," என்று கூறியுள்ளார்.