ஜீவா நடித்த படத்திலேயே ஹீரோயினுக்கு நடந்த பாலியல் தொல்லை?.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!
சென்னை: மன்சூர் அலி கான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதை அப்படி பொதுவெளியில் ஆபாசமாக பேசியது தவறு தான் என்றும் ஆனால், சினிமாவில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரும் படு மோசமானவர்களாக இருக்கும் நிலையில், வில்லன் நடிகர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள் என பிஸ்மி பேசியுள்ளார்.
சீனு ராமசாமி இளம் நடிகை மனிஷா யாதவை கொடைக்கானலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் ஜீவா நடித்த படத்தில் இயக்குநர் அந்த ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற விவகாரமும் அதற்கு அந்த ஹீரோயின் சம்மதிக்காத நிலையில், நடந்த வன்முறை குறித்தும் திடுக்கிடும் தகவல்களை பேசியுள்ளார்.

பிஸ்மியை பேச விட்டால் பயில்வான் ரங்கநாதன் பொழப்பே காலியாகி விடும் போல தெரிகிறதே இத்தனை ரகசியங்களை தெரிந்து வைத்துக் கொண்டு ஏன் வெளியே சொல்லாமல் இருக்கிறார் என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ஜீவா படத்தில் ஹீரோயினுக்கு நடந்த கொடுமை: வெளிநாட்டில் ஜீவாவின் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும் என நினைத்த இயக்குநர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த இளம் நடிகை அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், காண்டான இயக்குநர் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் ஹீரோயினின் முகத்தையே காட்டாமல் படம் பிடித்ததாக பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மதிக்கத்தக்க இயக்குநர்: ஆனால், அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக பிஸ்மி சொல்லாமல் மறைத்து விட்டார். மதிக்கத்தக்க இயக்குநர் என்று மட்டும் சொல்லி விட்டு அவர் பண்ண படு மோசமான விஷயத்தையும் ஜீவா நடித்த படத்திலேயே இப்படியொரு அட்டூழியம் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
லாங் ஷாட் மட்டும்: அந்த ஹீரோயினை பேக் ஷாட்டில் மற்றும் முகம் தெரியாமல் லாங் ஷாட்டில் மட்டும் தான் அந்த பாடலில் இயக்குநர் பயன்படுத்தியிருப்பார் என்றும் இந்த விஷயத்தை வெளியே வரவிடாமல் படக்குழுவே மறைத்து விட்டனர். அதன் பின்னர் அந்த நடிகை அந்த இயக்குநர் படத்தில் பணியாற்றவே இல்லை என்றும் கூறியுள்ளார். சினிமாவில் உள்ள பல அழுக்கான விஷயங்கள் மன்சூர் அலி கான் மேட்டர் மூலமாக வெளியே வரும் என தெரிகிறது.
மறைக்கும் நடிகைகள்: த்ரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி குரல் கொடுத்து விட்டார் என்று குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பாராட்டி வருகின்றனர். ஆனால், சிரஞ்சீவி இளம் நடிகைகளான பூஜா ஹெக்டே, தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷிடம் மார்பை உரசும் அளவுக்கு மோசமாக பொதுவெளியில் நடந்து கொள்ள கீர்த்தி சுரேஷ் தனது விரலை வைத்து அவரது கையை தடுத்து விடும் நிலையில் உள்ள பல வீடியோக்கள் தற்போது பரவி வருகிறது. நடிகைகள் தாங்களும் காஸ்டிங் கோச் அனுபவங்களை சந்தித்துள்ளோம் என பல ஆண்டுகள் கழித்து சொல்வதை விட உடனுக்குடன் ஓப்பனாக சொன்னால் தான் நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும், தப்பாக நடக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பயம் வரும் என்றும் சினிமா நடிகைகள் தொழில் செய்வதற்கான பாதுகாப்பான சூழலான இடமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











