Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கத்திக் கூப்பாடு போட்ட அலாரம்.. லண்டன் ஓட்டலில் தம் அடித்து மாட்டிய நடிகர் ஜீவா.. ஷாக் ஆன 83 டீம்!
சென்னை: 83 படத்துக்காக லண்டன் சென்றபோது, அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தம் அடித்து மாட்டிக்கொண்டேன் என்று நடிகர் ஜீவா கூறினார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.
கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.
கிரிக்கெட் மற்றும் சினிமா இணைந்த உன்னத தருணங்கள் சென்னையில் நடந்தது
ஶ்ரீகாந்தாக ஜீவா
சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
லண்டன் ஓட்டல்
இதில் கபில்தேவ், ரன்வீர் சிங், இயக்குனர் கபீர்கான், கமல்ஹாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது, லண்டன் நட்சத்திர ஓட்டலில் சிகரெட் பிடித்து மாட்டிக்கொண்டேன் என்று சொன்னார்.
நம்பிக்கை வரலை
அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக இயக்குனர் கபீர் கானை சந்தித்த போது, நீங்க சீக்கா (ஶ்ரீகாந்த்) சார் ரோல் பண்றீங்கன்னு சொன்னார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. பிறகு அதுக்கு நிறைய உதவி பண்ணினாங்க. இருந்தாலும் எனக்கு நம்பிக்கை வரலை. லண்டன் வரை ஷூட்டிங் போயிட்டோம். இருந்தும் பயம் இருந்துச்சு.
3 செகண்ட்தான்
அந்த நட்சத்திர ஓட்டல்ல 19 மாடியில ரூம். போயிட்டோம். அங்க சிகரெட் அடிச்சோம். ரூம்ல சிகரெட் பிடிக்க கூடாதுன்னு ஸ்டார் ஓட்டல்ல சொல்வாங்க. ஆனா, நம்ம ஊரை மாதிரி, கேட்டா சொல்லிக்கலாம்னு நாங்க பாட்டுக்கு தம்மடிச்சுட்டு இருந்தோம். 3 செகண்ட்தான். அலாராம் கத்த ஆரம்பிச்சுடுச்சு.
சீக்கா மாதிரி பயிற்சி
தட தடன்னு ஓட்டல்காரங்க ஓடி வந்தாங்க. நீங்க எல்லாரும் வெளிய போங்கன்னு சொல்லிட்டாங்க. டைரக்டர் கபிர் கான்ல இருந்து எல்லாரும் எங்களை தேடி வந்துட்டாங்க. யார் ஸ்மோக் பண்ணினா? யார் ஸ்மோக் பண்ணினான்னு கேட்க ஆரம்பிச்சதும் எனக்கு பயம். அப்புறம் நானே போய் சரண்டர் ஆனேன். 'சார், நான்தான் சீக்கா சார் மாதிரி பயிற்சி எடுத்துட்டு இருந்தேன்'னு பொய் சொன்னேன். அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சுட்டோம்.
இந்தியா முழுவதும்
பிறகு முதல் நாள் ஷூட்டிங்ல இருந்து, என்னை சீக்கா சார்னு நான் நம்ப ஆரம்பிச்சிட்டேன். ரன்வீர் சிங், இதுல சேலஞ்சிங் கேரக்டர் பண்ணியிருக்கார். இந்த டீம்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இந்த படம் மூலம் இந்தியா முழுவதும் எனக்கு நண்பர் கிடைச்சிருக்காங்க. அனைவருக்கும் நன்றி. இந்தப் பட வாய்ப்புக்கு என்னை சிபாரிசு செய்த விஷ்ணுவுக்கும் நன்றி. இவ்வாறு பேசினார் ஜீவா.
பட்டா பாக்கியம்
அவரிடம், 'சீக்கா சாரை பொறுத்தவரை அவர் கிரியேட்டிவ் பண்ண ஷாட்தான் ஆடுவார். இந்த படத்துல நடிக்கும் போது அவரை போல ஆடறதுக்கு உங்களுக்கு எப்படியிருந்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறும்போது ' இந்தப் படத்துக்காக சீக்கா சாரை போய் நான் பார்த்தேன். ஐடியாஸ் கேட்டேன். அப்போ அவர் சொன்னது, டேய் ஜீவா, கண்ண மூடிட்டு சும்மா சுத்துடா... பட்டா பாக்கியம், படலைன்னா, லேகியம்'ன்னு சொன்னார்' என்றார்.