சிங்கார தமிழ்நாட்டைக்காண ஆவலுடன் இருக்கிறேன்… நடிகர் ஜீவா ட்வீ ட்!
சென்னை : முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் முகஸ்டாலினுக்கு தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
அதில் சிங்கார தமிழ்நாட்டைக்காண ஆவலுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மும்முரமான வாக்கு எண்ணிக்கை
ஏப்ரல் 6ந் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்றுக்காலை 8 மணி முதல் மும்முரமாக எண்ணப்பட்டன. பல தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு வெளியாகிவிட்டன. தற்போதைய நிலவரப்படி தனிப்பெரும்பாண்மையுடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது.

தனிப்பெரும்பான்மையுடன்
234 தொகுதிகளில் முழு வெற்றி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களை வென்றுள்ளன. அதிமுக கூட்டணி 75 இடங்களை வென்றுள்ளன திமுகத் தலைவர் திரு முகஸ்டாலின் தனிப்பெரும்பான்மையோடு முதன்முறையாக முதலமைச்சராக உள்ளார்.
பிரபலங்கள் வாழ்த்து
அவருக்கு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

ஆவலுடன் இருக்கிறேன்
சினிமா பிரபலங்கள் பலரும் இன்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் முகஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எங்கள் புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள், சிங்கார தமிழ்நாட்டைப் பார்க்க மிகுந்த நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பார்க்கிறேன். முதல் முறையாக சட்டமன்றத்தில் உறுப்பினராகி இருக்கும் எனது சகோதரர் உதயநிதிக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











