Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞர்:மறைந்த நடிகர் காளையின் பல முகங்கள்
சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலை தரக்குறைவாக பேசினாலும் ஈகோ இல்லாதவர் என விஷால் தரப்பாலேயே பாராட்டப்பட்டவர் பழம்பெரும் நடிகர் கே.என். காளை.
நடிகர் சங்க தேர்தலின்போது நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து விஷால் அணியினரை தரக்குறைவாக பேசினார் நடிகர் கே.என். காளை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக விஷால் காளை மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
விஷால் அணியினரை வசைபாடி அவர்களின் கோபத்திற்கு ஆளான ராதாரவியும், காளையும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது செய்த ஒரு காரியம் அனைவரையும் வியக்க வைத்தது.
நடிகர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு விஷால் அணியினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். காளை நிவாரணப் பொருட்கள் வழங்கிய இடத்திற்கு வந்து வரிசையில் நின்று அதை வாங்கிச் சென்றார்.
ராதாரவி பெரும் பணக்காரர் என்றாலும் வம்பு எதற்கு என தனது மகனை அனுப்பி நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டார். தங்கள் அணியை கடுமையாக விமர்சித்த காளை நேரில் வந்து அதுவும் வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கியதில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி.
பழம்பெரும் நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞரான அவர் ஈகோ பார்க்காமல் நிவாரணப் பொருட்களை வாங்கியதில் மகிழ்ச்சி, அவருக்கு சல்யூட் அடிக்கிறேன் என பொன்வண்ணன் தெரிவித்திருந்தார்.
ஈகோ இல்லாதவர் என பெயர் எடுத்த காளை இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.