Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞர்:மறைந்த நடிகர் காளையின் பல முகங்கள்
சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலை தரக்குறைவாக பேசினாலும் ஈகோ இல்லாதவர் என விஷால் தரப்பாலேயே பாராட்டப்பட்டவர் பழம்பெரும் நடிகர் கே.என். காளை.
நடிகர் சங்க தேர்தலின்போது நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து விஷால் அணியினரை தரக்குறைவாக பேசினார் நடிகர் கே.என். காளை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக விஷால் காளை மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
விஷால் அணியினரை வசைபாடி அவர்களின் கோபத்திற்கு ஆளான ராதாரவியும், காளையும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது செய்த ஒரு காரியம் அனைவரையும் வியக்க வைத்தது.
நடிகர் சங்கம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு விஷால் அணியினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். காளை நிவாரணப் பொருட்கள் வழங்கிய இடத்திற்கு வந்து வரிசையில் நின்று அதை வாங்கிச் சென்றார்.
ராதாரவி பெரும் பணக்காரர் என்றாலும் வம்பு எதற்கு என தனது மகனை அனுப்பி நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டார். தங்கள் அணியை கடுமையாக விமர்சித்த காளை நேரில் வந்து அதுவும் வரிசையில் நின்று நிவாரணப் பொருட்களை வாங்கியதில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி.
பழம்பெரும் நடிகர், நாடக கம்பெனி நடத்தியவர், டப்பிங் கலைஞரான அவர் ஈகோ பார்க்காமல் நிவாரணப் பொருட்களை வாங்கியதில் மகிழ்ச்சி, அவருக்கு சல்யூட் அடிக்கிறேன் என பொன்வண்ணன் தெரிவித்திருந்தார்.
ஈகோ இல்லாதவர் என பெயர் எடுத்த காளை இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.