Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரசியல், நடிப்பு என பிசியாக இருந்தாலும் மகள் சுஜாவுக்காக மறக்காமல் ‘இதை’ச் செய்த கமல்!
சுஜா வருணி சிவக்குமார் தம்பதிக்கு நடிகர் கமல் மதிய விருந்து கொடுத்தார்.
Recommended Video
சென்னை: சமீபத்தில் திருமணமான பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கு நடிகர் கமல் விருந்து கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அடிக்கடி சிறு வயதில் தங்களை நிராதரவாக விட்டுச் சென்ற தந்தை குறித்து உருக்கமாக சுஜா பேசியுள்ளார்.
அப்படி ஒரு முறை சுஜா பேசிய போது, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், "கவலைப்படாதே உனக்கு அப்பாவாக நான் இருக்கிறேன்" என ஆறுதல் கூறினார்.
சுஜா திருமணம்:
இந்நிலையில் சமீபத்தில் தனது காதலர் சிவக்குமாரை சுஜா மணந்தார். இத்திருமணத்தில் கமல் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் நடிகை ஸ்ரீப்ரியா தனது கணவருடன் சென்று திருமண சடங்குகளில் கலந்துகொண்டார்.
இது தான் காரணம்:
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணி மற்று கட்சி பணி ஆகியவற்றில் கமல் பிஸியாக இருந்தார். இதனாலேயே அவரால் சுஜா திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. கமலின் இந்த திடீர் விருந்தால், சுஜா - சிவக்குமார் தம்பதி மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
கமல் தந்த விருந்து:
இந்த சூழலில் புதுமணத் தம்பதியரை அழைத்து மதிய உணவு கொடுத்து, விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் கமல். இந்த விருந்தில் நடிகை ஸ்ரீப்ரியாவும் கலந்துகொண்டார். இது தொடர்பாக புகைப்படங்களை சுஜா வருணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சுஜா மகிழ்ச்சி:
கூடவே "சந்தோஷமான தருணம் இது. கமல் எங்களை விருந்துக்காக அழைத்ததற்கு நானும் எனது அத்தான் சிவக்குமாரும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எனது மாமியார் ஸ்ரீப்ரியாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அப்பா கமல் விரைவில் வீட்டிற்கு வரவிருக்கிறார். என் கண்களில் ஆனந்த கண்ணீர்", என அவர் பதிவிட்டுள்ளார்.