ஒரு குரலாய்.. கமல்ஹாசன்.. ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மெகா இசைசங்கமம்!
சென்னை: யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று "ஒரு குரலாய்" என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ்த்த இருக்கிறது.
பிரபலப் பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ்வில் பங்கேற்று இசையுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள் .
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்துகொண்டு பல இசைக்கலைஞர்களை நினைவுக்கூர்ந்து திரையில் அவருடைய குரலில் பாடிய பாடல்களைப் பாட இருக்கிறார்.

ஊடகா
ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடக்கும் இந்த இனிய இசை நிகழ்வை ஒருங்கிணைப்பது 'சில்வர் ட்ரீ' நிறுவனம். இதற்கு, 'ஊடகா' (Oodagaa) நிறுவனம் டிஜிட்டல் ஆதரவு அளிக்க உள்ளது. அதேபோல், இன்சைடர் டாட் இன் (insider.in) என்ற வலைதளம் நிதி திரட்ட உதவியுள்ளது

முக்கியமான அங்கங்ககளாக
நிதி திரட்ட பல விதமான முயற்சிகள் எடுத்து வரும் இசைமைப்பாளர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் இசையுடன் கூடிய நம்பிக்கையை மக்களிடம் விதைகிறார்கள் .சமூக வலைத்தளங்களில் தொடர...
முகநூல் -facebook./usctofficial என்ற இணைப்பையும் வழங்கி வருகிறார்கள் . ஒரு பக்கம் இசை மற்றொரு பக்கம் நிதி என்று இரண்டு முக்கியமான அங்கங்ககளாக செயல்பட இருக்கிறார்கள்

மிக பெரிய அளவில்
கமலஹாசன் ரசிகர்கள் ஒரு பக்கம் இதை மாபெரும் கொண்டாட்டமாக பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக கமல் ஆதரவாளர்கள் இப்படி பட்ட முயற்சிக்கு மிக பெரிய அளவில் பக்க பலமாக செயல்படுகிறார்கள் . மக்களுக்கான நிதி என்பதால் பல விளம்பரதாரர்கள் மிக எளிதாக முன்வந்து உள்ளதாக கூறப்படுகிறது .
Recommended Video
இசையை ரசிப்பவர்கள் , அனைத்து வயதை சேர்ந்தவர்களும் , பல மொழி இசை பிரியர்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்க மிகவும் தயாராக உள்ளார்கள் . ஒட்டு மொத்தமாக இசை மூலம் கிடைக்கும் இந்த நிதி மக்கள் சேவைக்கு பெரிதும் பயன்படும் என்பது தான் அனைவரது நம்பிக்கையும்.


Click it and Unblock the Notifications











