Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உதவித் திட்டங்களில் அவர்களையும் சேருங்கள்.. கவலையின்றி பசியாறுவர்.. நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை!
சென்னை: அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களையும் இசைக் குழுவினரையும் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா என்ற ஒற்றை வார்த்தை உலக மக்களையே மிரட்டி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்திற்கு இந்தியாவிலும் இதுவரை 19 பேர் பலியாகியிருக்கின்றனர். 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மக்களின் அன்றாட தேவைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசும் அன்றாட வேலை, தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள்.அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில்,அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 28, 2020
அதில், தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர் என தெரிவித்துள்ளார்.