Don't Miss!
- Finance RCB கப் அடிக்காவிட்டாலும், இந்த விஷயத்தில் கில்லி.. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் செய்த ராயல் சம்பவம்!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
'அந்த' ரோலுக்காக நாகேஷ் என்னிடம் சண்டை போட்டார்.. 29 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த கமல்ஹாசன்!
சென்னை: மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அந்த ரோல் கொடுத்ததற்காக நடிகர் நாகேஷ் தன்னிடம் சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் 1991ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இதில் நடிகர் கமல்ஹாசன், மைக்கேல், மதனகோபால், காமேஷ்வரன் மற்றும் சுப்பிரமணிய ராஜன் ஆகிய நான்கு வேடங்களில் நடித்திருந்தார்.
நல்ல வரவேற்பு
மேலும் ஊர்வசி, ரூபிணி, குஷ்பு, நாகேஷ், மனோரமா, நாசர், எஸ்என் லட்சுமி, வெண்ணிறாடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சந்தான பாரதி, கிரேஸி மோகன் உள்ளிட்ட ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நினைவு கூட்டம்
இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அண்மையில் வீடியோ வாயிலாக உரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கிரேஸி மோகன் எழுதிய வசனங்களை நினைவு கூர்ந்தார்.
வேறு கேரக்டரை விரும்பினார்
தொடர்ந்து பேசிய அவர், அந்தப் படத்தில் நடித்த நாகேஷ் குறித்தும் பேசினார். அதாவது, நடிகர் நாகேஷ் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வேறொரு கேரக்டரை விரும்பியதாகவும் அவர் நடித்த கேரக்டர் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
என் கதாப்பாத்திரம் வேண்டுமா
அவர் நடித்த அவினாஷி கதாப்பாத்திரத்திற்காக அதை ஏன் என்னிடம் கொடுத்தாய் என நாகேஷ் தன்னிடம் சண்டை போட்டதாகவும் தெரிவித்தார் கமல். மேலும் என்னுடைய கதாப்பாத்திரத்தை விரும்புகிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன், நான் அதை அவருக்குக் கொடுக்க மாட்டேன் என்று அவருக்குத் தெரியும் என்றும் வேடிக்கையாக கூறினார் கமல்.
வேற லெவலில் இருந்திருக்கும்
அதோடு மட்டுமின்றி குறைந்தபட்சம் எஸ்.என்.லட்சுமி வேடத்தையாவது நான் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்படி அந்த ரோலை அவருக்கு கொடுத்திருந்தால் அது வேற லெவலில் இருந்திருக்கும் என்று நாகேஷ் எஸ்என் லட்சுமியை கிண்டல் செய்வார், "என்றும் கமல் கூறினார்.
ஆச்சரியப்படுகிறோம்
இப்போது, எஸ்.என். லட்சுமியின் பாத்திரத்தை நாகேஷ் எவ்வாறு கையாண்டிருப்பார் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம், இது அவினாஷியைப் போலவே திட்டமிடப்பட்ட ஒரு வயதான பெண்மணியின் பாத்திரமாகும் என்றார் நடிகர் கமல்ஹாசன்.