Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'அந்த' ரோலுக்காக நாகேஷ் என்னிடம் சண்டை போட்டார்.. 29 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த கமல்ஹாசன்!
சென்னை: மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அந்த ரோல் கொடுத்ததற்காக நடிகர் நாகேஷ் தன்னிடம் சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் 1991ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இதில் நடிகர் கமல்ஹாசன், மைக்கேல், மதனகோபால், காமேஷ்வரன் மற்றும் சுப்பிரமணிய ராஜன் ஆகிய நான்கு வேடங்களில் நடித்திருந்தார்.
நல்ல வரவேற்பு
மேலும் ஊர்வசி, ரூபிணி, குஷ்பு, நாகேஷ், மனோரமா, நாசர், எஸ்என் லட்சுமி, வெண்ணிறாடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சந்தான பாரதி, கிரேஸி மோகன் உள்ளிட்ட ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நினைவு கூட்டம்
இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அண்மையில் வீடியோ வாயிலாக உரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கிரேஸி மோகன் எழுதிய வசனங்களை நினைவு கூர்ந்தார்.
வேறு கேரக்டரை விரும்பினார்
தொடர்ந்து பேசிய அவர், அந்தப் படத்தில் நடித்த நாகேஷ் குறித்தும் பேசினார். அதாவது, நடிகர் நாகேஷ் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வேறொரு கேரக்டரை விரும்பியதாகவும் அவர் நடித்த கேரக்டர் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
என் கதாப்பாத்திரம் வேண்டுமா
அவர் நடித்த அவினாஷி கதாப்பாத்திரத்திற்காக அதை ஏன் என்னிடம் கொடுத்தாய் என நாகேஷ் தன்னிடம் சண்டை போட்டதாகவும் தெரிவித்தார் கமல். மேலும் என்னுடைய கதாப்பாத்திரத்தை விரும்புகிறாரா என்று நான் அவரிடம் கேட்டேன், நான் அதை அவருக்குக் கொடுக்க மாட்டேன் என்று அவருக்குத் தெரியும் என்றும் வேடிக்கையாக கூறினார் கமல்.
வேற லெவலில் இருந்திருக்கும்
அதோடு மட்டுமின்றி குறைந்தபட்சம் எஸ்.என்.லட்சுமி வேடத்தையாவது நான் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்படி அந்த ரோலை அவருக்கு கொடுத்திருந்தால் அது வேற லெவலில் இருந்திருக்கும் என்று நாகேஷ் எஸ்என் லட்சுமியை கிண்டல் செய்வார், "என்றும் கமல் கூறினார்.
ஆச்சரியப்படுகிறோம்
இப்போது, எஸ்.என். லட்சுமியின் பாத்திரத்தை நாகேஷ் எவ்வாறு கையாண்டிருப்பார் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம், இது அவினாஷியைப் போலவே திட்டமிடப்பட்ட ஒரு வயதான பெண்மணியின் பாத்திரமாகும் என்றார் நடிகர் கமல்ஹாசன்.