Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரதமரின் சுய ஊரடங்கு கோரிக்கை.. நடிகர் கமல்ஹாசன் ஆதரவு.. ரஜினி உட்பட நண்பர்களுக்கும் அழைப்பு!
சென்னை: கொரோனாவுக்கு எதிரான பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களை மூட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கூறி வருகின்றனர்.
பிரதமர் கோரிக்கை
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் முக்கியமான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 22ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சுய ஊரடங்கு
வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் 5 மணிக்கு வீட்டு வாயில்களில் நின்று கைகளை தட்டியும் மணியோசை எழுப்பியும் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்கு பலரும் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
|
ஆதரவு தருகிறேன்
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நம்முடைய பிரதமரின் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கான அழைப்புக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
|
ரஜினிக்கு அழைப்பு
இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு, நாம் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் நான் எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மக்களை 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 வரை ஜனதா ஊரடங்கு எனும் மக்களின் சுய ஊரடங்குக்கு ஆதரவு தர அழைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.