Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்!
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை நடையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவியரசர் கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் என பலவற்றை எழுதியவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
Arundhathi serial: அருந்ததியில் கோவை சரளா கெட்டப் நல்லாருக்கே!
பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்ட கவிஞர் கண்ணதாசன், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார். அவரது 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து கூறியிள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ். இவ்வாறு தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
செப்பிடும் நற்றமிழை
— Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2019
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்.
கமலின் இந்த பதிவை 6000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.