Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்.. கவிதை நடையில் வாழ்த்து கூறி அசத்திய கமல் ஹாசன்!
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிதை நடையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவியரசர் கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் என பலவற்றை எழுதியவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த கண்ணதாசன் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
Arundhathi serial: அருந்ததியில் கோவை சரளா கெட்டப் நல்லாருக்கே!
பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்ட கவிஞர் கண்ணதாசன், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மறைந்தார். அவரது 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து கூறியிள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ். இவ்வாறு தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
செப்பிடும் நற்றமிழை
— Kamal Haasan (@ikamalhaasan) June 24, 2019
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்.
கமலின் இந்த பதிவை 6000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.