Don't Miss!
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்
பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் உடலுக்கு நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர், நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர் என பழம்பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் குறித்து நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் (88), சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் முக்தா சீனிவாசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர். என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர். நாயகன் படத்தை தயாரித்தது அவருக்கும் பெருமை எனக்கும் பெருமை. முழு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், வருத்தப்பட எதுவுமில்லை. 89 வயது, இன்னும் 11 ஆண்டு இருந்திருந்தால் செஞ்சுரி அடித்திருப்பார். நினைத்திருந்தால் இருந்திருப்பார், போதுமென்று அவரே விடைபெற்றதாக கருதுகிறேன்" என்றார்.