Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்
பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் உடலுக்கு நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர், நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர் என பழம்பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் குறித்து நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த, பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் (88), சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரை உலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் முக்தா சீனிவாசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "நேருக்கு நேர் விமர்சிக்க உரிமை தந்தவர். என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர். நாயகன் படத்தை தயாரித்தது அவருக்கும் பெருமை எனக்கும் பெருமை. முழு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார், வருத்தப்பட எதுவுமில்லை. 89 வயது, இன்னும் 11 ஆண்டு இருந்திருந்தால் செஞ்சுரி அடித்திருப்பார். நினைத்திருந்தால் இருந்திருப்பார், போதுமென்று அவரே விடைபெற்றதாக கருதுகிறேன்" என்றார்.