Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நடிப்பின் மூலம் புதையலை விட்டு செல்கிறார்.. மறைந்த நடிகர் திலீப்குமாருக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி!
சென்னை: பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் திலீப்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான திலீப்குமார் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
கர்ப்பமானதையே சொல்லலையே.. அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவான கோப்ரா பட நடிகை.. குவியுது வாழ்த்து!
98 வயதான திலீப்குமார் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மூச்சு திணறல்
இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திடீர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார் திலீப்குமார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று மறைவு
அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி திலீப்குமார் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கரிசனம் மிக்கவர்..
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் திலீப்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார். இந்திய பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப்பாலமாகத் திகழ்ந்தவர். ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர். நிறைவாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்குப் புகழஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.
தரமும் அர்ப்பணிப்பும்
இதேபோல் ஆங்கிலத்திலும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, திலீப்குமார் சாஹேப். என்னைப் போன்ற பல நடிகர்களுக்கு அவர்களின் நடிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தரமும் அர்ப்பணிப்பும் கற்பிக்கும் தொழில்.
புதையலை விட்டு சென்றுள்ளார்
உண்மையிலேயே இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் இன்று நம்மை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவரது நடிப்பின் மூலம் அவரது புத்திசாலித்தனத்தின் ஒரு புதையலை விட்டு செல்கிறார். அவருடைய அணுகுமுறை சமகால நடிகர்களால் இன்னும் முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறு கமல்ஹாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.