Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாவ்... சூப்பர் போட்டி கார்த்தி... இந்த செயலுக்காக நிச்சயம் விவசாயிகள் உங்கள மனசார பாராட்டுவாங்க!
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி, பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறு கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளையமகனான கார்த்தியும், அவரது அண்ணன் நடிகர் சூர்யாவும், நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். அகரம் புவுண்டேஷன் மூலம் நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து வருகிறார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடித்த பிறகு, உழவன் அறக்கட்டளை எனும் அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார் கார்த்தி. விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, சொந்த ஊரில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இதுகுறித்து அவர் கூறியதாவது, "விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்.
Bigil: டீசரும் இல்ல டிரெய்லரும் இல்ல.. ஆனா இன்று முக்கிய அப்டேட் வருது... ரெடியாகுங்க விஜய் ரசிகாஸ்!
மேலும், உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்", இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.
தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து, ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.