Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாவ்... சூப்பர் போட்டி கார்த்தி... இந்த செயலுக்காக நிச்சயம் விவசாயிகள் உங்கள மனசார பாராட்டுவாங்க!
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி, பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறு கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளையமகனான கார்த்தியும், அவரது அண்ணன் நடிகர் சூர்யாவும், நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். அகரம் புவுண்டேஷன் மூலம் நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து வருகிறார்.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடித்த பிறகு, உழவன் அறக்கட்டளை எனும் அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார் கார்த்தி. விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக, சொந்த ஊரில் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இதுகுறித்து அவர் கூறியதாவது, "விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்.
Bigil: டீசரும் இல்ல டிரெய்லரும் இல்ல.. ஆனா இன்று முக்கிய அப்டேட் வருது... ரெடியாகுங்க விஜய் ரசிகாஸ்!
மேலும், உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்", இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.
தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படம் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து, ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.