Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயவுசெய்து அனைவரும் வாக்களியுங்கள் - கார்த்தி
சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்கும் புதிய கட்சி உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும் மக்கள் குடைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 19.3% வாக்குகள் தமிழகம் முழுவதும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்று சொன்னாலும் வரிசையில் நின்று வாக்களிக்க திரை நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் நீண்ட வரிசையில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார் ''மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துங்கள்.
இல்லையெனில் படிப்படியாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள். ஆறு, ஏரிகளை தூர் வாரி மரம் நடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என ஆட்சியமைக்கும் புதிய கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.
சிவகுமாரின் மகனும், நடிகருமான கார்த்தி ''மழை பெய்கிறது என்று வீட்டில் இருக்காமல் தயவுசெய்து வந்து ஓட்டுப் போடுங்கள். விவசாயம் தமிழகத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது.
வருகின்ற ஆட்சி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அமேரிக்காவில் இருப்பதால் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா அவரின் மனைவி ஜோதிகா ஆகியோர் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.