Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
இந்த வார்த்தையைக் கேட்க 8 வருஷம் ஆகியிருக்கு.. கார்த்தி உருக்கம்
Recommended Video
சென்னை: உதயா கதாநாயகனாக நடிக்கும் 'உத்தரவு மகாராஜா' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, தனக்கும் சூர்யாவிற்கும் வெற்றி என்பது எளிதில் கிடைக்கவில்லை என்று மனம் திறந்து பேசினார்.
அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கார்த்தி கூறுகையில்:
உதயா, பிரபுவுடன் இணைந்து கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் வெற்றிபெறவேண்டும் . சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். புதிய கதாநாயகி நடித்து இருக்கிறார். இதற்கு பெரிய மனது வேண்டும். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்த துறையில் ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுவார்கள்.
எங்களை சுற்றி பல பேர் தனது மகன்கள் இருவரையும் சிவகுமார் சுலபமாக சினிமாவுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்று பேசுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல, நானும் சூர்யாவும் சுலபமாக இங்கு வந்துவிடவில்லை.
பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து தான் இந்த துறையில் இவ்வளவு தூரத்திற்கு வந்தோம், சினிமாவில் முதலில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது காத்திருப்பது எப்படி என்பதைத்தான். ஒரு நடிகனின் முதல் வெற்றிக்கும் அடுத்த வெற்றிக்கும் இடையில் பெரிய காத்திருப்பு உள்ளது.
சிறுத்தைக்கு பிறகு நான் சமீபத்தில் நடித்து வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து தான் பலரும் நான் சிறப்பாக நடித்து இருக்கிறேன் என்று கூறினார்கள், இடையில் எவ்வளவோ படம் நடித்தேன். ஆனாலும் கடைக்குட்டி சிங்கம்தான் சிறந்த படம் என்கின்றனர் மக்கள். இந்த வார்த்தையை கேட்பதற்கு 8 வருடங்கள் ஆகி இருக்கிறது." என்று பேசினார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் அருண்குமார், விவேக், பொன் வண்ணன், ஸ்ரீமன், டைரக்டர் விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராஜன், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!