Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஹா.. என்னவொரு அழகான தமிழ்ப் பெயர்.. "என் பிள்ளை கந்தன்".. நெகிழ்ந்து மகிழ்ந்த கார்த்தி!
சென்னை : நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகனான கார்த்தி, 2004 ல் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். 2007 ல் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
Recommended Video
முதல் படமே மெகா ஹிட் படமாக கார்த்திக்கு அமைந்து விட்டதால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்திக்கு 2011 ல் ரஞ்சனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. இவருக்கு உமையாள் என பெயரிட்டுள்ளார் கார்த்தி. தற்போது தனக்கு மகன் பிறந்துள்ளதை வித்தியாசமான முறையில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் கார்த்தி அறிவித்துள்ளார்.
பிஞ்சு குழந்தை கை நீட்டும் போட்டோவுடன்,
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா.
என்ற வாசகத்தை கார்த்தி பதிவிட்டுள்ளார்.
கார்த்தியின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதிலும் இன்ஸ்டாகிராமில் கார்த்தி பதிவிட்ட 30 நிமிடங்களில் 22,000 பேர் லைக் செய்து, வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.