ரசிகர்களை கவர்ந்த சோழா சோழா பாடல்.. இரண்டு நாட்கள் கழித்து வாழ்த்திய கார்த்தி!
சென்னை : நடிகர் கார்த்தி, விக்ரம் ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் படம்.
Recommended Video
இயக்குநர் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டாக வெளியாகவுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் பிரம்மாண்டமான அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு ஏராளமான வியூஸ்களை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள நிலையில், முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சம்
இந்தப் படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியுள்ளது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடும்கூட பிரம்மாண்டத்தில் மிரட்டி வருகிறது. டீசர் மற்றும் முதல்பாடல் சென்னையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

சோழா சோழா பாடல்
ஆதித்ய கரிகாலனின் சிறப்பை சொல்லும் சோழா சோழா பாடல் இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சியில் தெலுங்கில் வெளியிடப்பட்டது. தமிழில் பிரபல இசையமப்பாளர் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இந்தப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரமிற்கு கார்த்தி பாராட்டு
இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியான போதிலும் அதன் மேக்கிங் சிறப்பாக காணப்படுகிறது. அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த பாடலுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார் வந்தியத் தேவனாக படத்தில் நடித்துள்ள கார்த்தி.

ஐதராபாத்தில் பாடல் வெளியீடு
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் பாடலின் வெளியீட்டின்போதும் கார்த்தி கலந்துக் கொண்டார். விக்ரம் -கார்த்தி இருவரும் மிகவும் கம்பீரமான உடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து ஆதித்ய கரிகாலனுக்கு வந்தியத்தேவன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

விக்ரமை வாழ்த்திய கார்த்தி
ஆதித்ய கரிகாலனின் கிளிம்ஸ் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளதாகவும் சியான் சார் எப்போதும் ராக் ஸ்டார் என்றும் அவர் தனது ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 19ம் தேதி வெளியான மெட்ராஸ் டாக்கீசின் இந்தப் பாடல் வெளியீடு குறித்த ட்வீட்டிற்குதான் கார்த்தி தற்போது பதில் ட்வீட் செய்துள்ளார்.

வந்தியத் தேவனின் டக்கு
இந்நிலையில் வந்தியத் தேவனின் இந்த டக்கு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இதுதானா சார் உங்க டக்கு என்றும் ஆதித்ய கரிகாலனை இரண்டு நாட்கள் கழித்து வாழ்த்திய வந்தியத் தேவன் என்றும் பல கமெண்ட்களை அவர்கள் பதிவிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











