Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொரோனா லாக்டவுனால் வேலை இல்லை.. வறுமையை விரட்ட காய்கறி வியாபாரத்தில் இறங்கிய மேலும் ஒரு நடிகர்!
மும்பை: கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட வறுமையால், மேலும் நடிகர் ஒருவர் காய்கறி வியாபாரி ஆகி இருக்கிறார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மூக்கில் டியூப்.. எப்படி இருக்கிறார் விஜயலக்ஷ்மி.. தீயாய் பரவும் சிகிச்சைப் பெறும் போட்டோ!
லாக்டவுன்
இருந்தும் இதன் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிரட்டும் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 4 மாதங்களாக லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகினர். இப்போது சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
காய்கறி வியாபாரம்
பலர் தங்கள் தொழிலை மாற்றியுள்ளனர். சினிமா தொழிலாளர்களும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவருபவர்களும் வாழ்வாதாரத்துக்காக வேறு வேலைகளில் இறங்கியுள்ளனர். மராத்தி மற்றும் இந்தி நடிகர்கள் சிலர் காய்கறி வியாபாரம் செய்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு இந்தி நடிகர் காய்கறி வியாபாரியாக மாறி இருக்கிறார்.
அமிதாப்பச்சன்
ஒடிசா மாநிலம் கரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா சஹூ (Kartika Sahoo). தனது 17 வயதில் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்காக மும்பை சென்றார். அமிதாப்பச்சன் உள்பட சில நடிகர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாவலராக பணியாற்றினார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லேடி லக் என்ற படம் மூலம் நடிகர் ஆனார்.
நடிகர் அக்ஷய் குமார்
இதற்கிடையே கொரோனாவால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த கார்த்திகா சஹூ தற்போது சொந்த ஊரான ஒடிசாவுக்கு திரும்பி, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, அக்ஷய்குமார் நடிப்பில் ரிலீஸ் ஆகவுள்ள 'சூரியவன்ஷி' படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். மார்ச் 22 ஆம் தேதி படபிடிப்பு முடிந்தது.
மருத்துவ செலவு
உடனடியாக சொந்த ஊரான ஒடிசா திரும்பினேன். மருத்துவ செலவுக்காக, என்னிடம் இருந்த சேமிப்பு கரைந்து விட்டது. தலைநகர் புவனேஸ்வர் வந்து வேலை தேடினேன். கிடைக்கவில்லை. உடனே காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். நம்பிக்கையை இழக்கவில்லை. நிலைமை மீண்டும் சகஜமானவுடன் நடிப்பதற்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.