Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
4,5 படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு- கருணாஸ்
சென்னை: நான்கைந்து படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு என நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகராக வலம்வரும் கருணாஸ் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக சட்ட சபையில் நுழைந்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ''எம்எல்ஏ பணிகளில் பிஸியாக இருப்பதால் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவிருக்கிறேன்.
நடிப்பு, எம்எல்ஏ பதவி, நடிகர் சங்க துணைத்தலைவர் போன்றவற்றால் எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவும் முயற்சி செய்து வருகிறேன். என்னுடைய தொகுதியின் பிரச்சினைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன்.
அவர் விரைவில் இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார். சமுதாயத்தில் உழைப்பவர்கள் அரசியலுக்கு வரவேற்கப்படுகின்றனர். ஆனால் நான்கைந்து படங்களில் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு.
ஏனெனில் தற்போதைய மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது'' என்று தெரிவித்திருக்கிறார்.