Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
4,5 படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு- கருணாஸ்
சென்னை: நான்கைந்து படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு என நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகராக வலம்வரும் கருணாஸ் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக சட்ட சபையில் நுழைந்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ''எம்எல்ஏ பணிகளில் பிஸியாக இருப்பதால் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவிருக்கிறேன்.
நடிப்பு, எம்எல்ஏ பதவி, நடிகர் சங்க துணைத்தலைவர் போன்றவற்றால் எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவும் முயற்சி செய்து வருகிறேன். என்னுடைய தொகுதியின் பிரச்சினைகளை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன்.
அவர் விரைவில் இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார். சமுதாயத்தில் உழைப்பவர்கள் அரசியலுக்கு வரவேற்கப்படுகின்றனர். ஆனால் நான்கைந்து படங்களில் நடித்து விட்டு முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு.
ஏனெனில் தற்போதைய மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது'' என்று தெரிவித்திருக்கிறார்.