Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'விக்ரம் வேதா'வில் செம நடிப்பு.. அடுத்த படத்தில் கதிர் போலீஸ்!
சென்னை : 'விக்ரம் வேதா' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம், நடிகர் கதிருக்கு போலீஸ் ஹீரோவாக நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ராதா மோகன், பொம்மரிலு பாஸ்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நவீன் நஞ்சுண்டன். இவர் இயக்கும் படம் 'சத்ரு'. இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையைக் கொண்டது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்க இருக்கிறார் கதிர். இவரது 'சிகை' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
"கதிரும், அவரது குடும்பத்தாரும் யாரெனத் தெரியாத நான்கு பேரால் அச்சுறுத்தப்படுகிறார்கள். அது ஏன், அந்தப் புதிரை கதிர் எப்படி 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கிறார் என்பதே கதை. சொல்லப்போனால், படம் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே கதிர் அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். நான் கையாண்டிருக்கும் வித்தியாசமான திரைக்கதை ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். " எனச் சொல்லியிருக்கிறார் நவீன்.
இந்த கேரக்டருக்கு கதிரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனும் கேள்விக்கு, "ஒரு இளமையான அதேநேரம் வித்தியாசமான போலீஸ்தான் வேண்டும். இது வழக்கமான ஆக்ஷன் போலீஸ் கதை அல்ல. இந்த போலீஸ் குற்றத்தை வேறொரு கோணத்தில் பார்ப்பார். கதிர் நடித்த 'கிருமி', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களைப் பார்த்தபிறகுதான் இவர்தான் வேண்டும் எனத் தேர்ந்தெடுத்தேன்" என்கிறார் நவீன்.
'ராட்டினம்' படத்தில் நடித்த லகுபரன் இதில் அந்த நான்கு வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார். இந்த ரோல் கிட்டத்தட்ட 'தனி ஒருவன்' அர்விந்த்சாமியை நினைவுபடுத்துமாம். கதிரின் அப்பாவாக பொன்வண்ணன் நடிக்கிறார். இந்தப் படத்தில் கதிரின் காதலியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார்.
சென்னை, புதுச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் முதல்கட்டப் படப்படிப்பு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 70 சதவீத காட்சிகள் இரவுநேரத்தில் எடுக்கப்பட்டவைதானாம். நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதைவிட நகர்ப்பகுதிகளில் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது என்கிறார் நவீன்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?