Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
‘காதலி காணவில்லை’... நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதிய கிஷோர்!
பெங்களூரு: வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் கிஷோர் நாயகனாக நடித்து வரும் படம் ‘காதலி காணவில்லை'.
மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் தயாரிப்பில், ரவி ராஜா இயக்கி வரும் படம் ‘காதலி காணவில்லை'. ஆடுகளம், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் கிஷோர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கிஷோருக்கு ஜோடியாக ஹார்திகா நடித்திருக்கிறார். மேலும் சோப்ராஜ், பத்மா வசந்தி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்ட சண்டைக்காட்சி...
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு கன்டெய்னர் யார்டில் பிரம்மாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
நூற்றுக்கணக்கான ரவுடிகள்...
இதில், நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப் பட்டது. இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர்.
கன்டெய்னர் யார்டு...
நவீன ரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கன்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுக்கு மத்தியில் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டம் ஸ்கீரின்ல தெரியணும்...
பிரம்மாண்டமாக இந்த சண்டைக் காட்சியைப் படமாக்க நிறைய செல்வாகும் என தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறப்பட்டதாம். அதற்கு அவர், ‘செலவு பற்றி கவலை இல்லை, ஆனால் பிரம்மாண்டம் ஸ்கிரீன்ல தெரியணும்' எனப் பதிலளித்தாராம்.
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி