Don't Miss!
- Finance தங்கம் விலை சரிவு.. இஸ்ரேல் முடிவால் அமெரிக்கா ஷாக்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Technology Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில், தற்போது புதிதாக நடிகர் லால் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இதனை நடிகர் லால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் அதுவரை பேசப்படாத பல உண்மைகளை பேசிய திரைப்படம். கதையில் பல சமூக அவலங்களை பேசியிருந்தார் மாரி செல்வராஜ். பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே இந்த படம் அமைந்திருந்தது. இப்படத்திற்காக பல விருதுகள் வழங்கபட்டது.
முக்கியமாக கோவா திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படத்திற்கு விருது கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இத்திரைப்படம் நிச்சயம் பல விருதுகளை குவிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பல சினிமா வட்டாரங்களில் உற்சாகமாக பேசி வருகின்றனர்.
தற்போது தனுஷ் அசுரன் படத்தை தெடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது லண்டனில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அசுரன் படத்தை லண்டனில் படக்குழுவுடனே கண்டு களித்தார் தனுஷ்.
அதற்கு பிறகு தனுஷ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எதிர் நீச்சல் ,காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர்.
அடுத்ததாக, தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஸ்டோரி டிஷ்கசனுக்காக, தனுஷ், மாரி செல்வராஜ் ஆகியோருடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டர் சென்றுள்ளனர்.
தனுஷ் பட டிஸ்கசன்: சந்தோஷ் நாராயணனுடன் லண்டன் பறந்த மாரி செல்வராஜ்
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் இணையும் இப்படம் தொடர்பாக தற்போது ஒரு செய்தி கசிந்துள்ளது. நடிகர் லால் இந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் லால் கூறியுள்ளார்.
In Mari Selvaraj's next! Looking forward to work with the multitalented @dhanushkraja Shoot starting in December #TamilCinema #Kollywood #Dhanush pic.twitter.com/qkP2zjFU3b
— Lal (@Lal_Director) October 19, 2019
லால் தமிழில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு பிரபாஸின் சாகோ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.