Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கி அசத்தல்!
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 150க்கும் மேற்கொண்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.
நாடு முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வர வேண்டிய நேரத்துல வெயிட்டா வரும்.. சம்மர் சம்ஹாரம் நிச்சயம்..
பாதிப்பு
இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்த வண்ணம் உள்ளன.
அரசு கோரிக்கை
தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ளதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள், மக்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
ரூ.3 கோடி
இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தலா 50 லட்சம்
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குவதாக, திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். மேலும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு
மேலும் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் தினக்கூலிகள் மற்றும் தான் பிறந்த இடமான ராயபுரம் தேசிய நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
அட்வான்ஸ்
நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்தின் அட்வான்ஸ் தொகையில் இருந்து இந்த நிதியை வழங்குவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றேகால் கோடி
இதுவரை கொரோனா நிதிக்காக தமிழ் சினிமாவில் அதிக நிதியை கொடுத்த நடிகராக அஜித் இருந்தார். நடிகர் அஜித் மத்திய மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் ஃபெஃப்ஸி அமைப்புக்கு ரூ.25 லட்சம் என ஒன்றேகால் கோடி ரூபாய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.