Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அஜித்தை தொடர்ந்து அள்ளிக்கொடுத்த லாரன்ஸ்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்கி அசத்தல்!
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக நடிகர் லாரன்ஸ் ரூ. 3 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 150க்கும் மேற்கொண்ட உயிர்களை பலி கொண்டுள்ளது.
நாடு முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வர வேண்டிய நேரத்துல வெயிட்டா வரும்.. சம்மர் சம்ஹாரம் நிச்சயம்..
பாதிப்பு
இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்த வண்ணம் உள்ளன.
அரசு கோரிக்கை
தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ளதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள், மக்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
ரூ.3 கோடி
இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தலா 50 லட்சம்
பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் வழங்குவதாக, திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். மேலும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு
மேலும் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் தினக்கூலிகள் மற்றும் தான் பிறந்த இடமான ராயபுரம் தேசிய நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
அட்வான்ஸ்
நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் லாரன்ஸ். நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க உள்ள சந்திரமுகி 2 படத்தின் அட்வான்ஸ் தொகையில் இருந்து இந்த நிதியை வழங்குவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றேகால் கோடி
இதுவரை கொரோனா நிதிக்காக தமிழ் சினிமாவில் அதிக நிதியை கொடுத்த நடிகராக அஜித் இருந்தார். நடிகர் அஜித் மத்திய மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் ஃபெஃப்ஸி அமைப்புக்கு ரூ.25 லட்சம் என ஒன்றேகால் கோடி ரூபாய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்