பெண் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடிகர் கைது

By Sudha

சென்னை: மதுராந்தகம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகரும், வக்கீலுமான தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மண்டபம் என்ற படத்தில் நடித்துள்ளவர் தமிழரசன். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். வக்கீலாக செயல்பட்டு வருகிறார்.

இவரை ஒரு வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவிதா என்ற 45 வயதுப் பெண் அணுகினார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக தமிழரசன், கவிதா மற்றும் தமிழரசனின் தோழியான அலமேலு ஆகியோர் காரில் மதுராந்தகம் சென்றனர். அலமேலு ஒரு துணை நடிகையாவார்.

இவர்களது கார், பழைய சீவரம் அருகே ஆற்றங்கரையில் கவிதா கத்திக்குத்துக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸில் கவிதாவைக் கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு தன்னை தமிழரசன்தான் கத்தியால் குத்தியதாக ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார் கவிதா. இதை அவர்கள் போலீஸில் தெரிவிக்கவே போலீஸார் தமிழரசனைக் கைது செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X