Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடிகர் கைது
சென்னை: மதுராந்தகம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகரும், வக்கீலுமான தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்டபம் என்ற படத்தில் நடித்துள்ளவர் தமிழரசன். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். வக்கீலாக செயல்பட்டு வருகிறார்.
இவரை ஒரு வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கவிதா என்ற 45 வயதுப் பெண் அணுகினார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக தமிழரசன், கவிதா மற்றும் தமிழரசனின் தோழியான அலமேலு ஆகியோர் காரில் மதுராந்தகம் சென்றனர். அலமேலு ஒரு துணை நடிகையாவார்.
இவர்களது கார், பழைய சீவரம் அருகே ஆற்றங்கரையில் கவிதா கத்திக்குத்துக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸில் கவிதாவைக் கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு தன்னை தமிழரசன்தான் கத்தியால் குத்தியதாக ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார் கவிதா. இதை அவர்கள் போலீஸில் தெரிவிக்கவே போலீஸார் தமிழரசனைக் கைது செய்தனர்.