Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிஜத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்த செல்வந்தன் நாயகன்
ஹைதராபாத்: தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தெலுங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய மெகபூப் மாவட்டத்தில் இருந்து ஒரு கிராமத்தை தத்தெடுத்து இருக்கிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் (தமிழில் செல்வந்தன்) தெலுங்கானா மாநிலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கானா மட்டுமல்லாது திரையிட்ட இடமெல்லாம் படம் ஓரளவிற்கு நன்றாக ஓடி வசூலைக் குவித்து வருகிறது, படத்தின் கதைப்படி மகேஷ்பாபு தான் பிறந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவார்.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகன், தாராக ராமராவ் மகேஷ்பாபுவை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.
மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது தெலுங்கானா மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘‘கிராம ஜோதி'' திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், படம் அமைந்து இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதோடு மிகவும் பின் தங்கியுள்ள மெகபூப் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை நீங்கள் தத்து எடுக்க வேண்டும் என்றும், அவர் மகேஷ்பாபுவை கேட்டுக் கொண்டார்.
இந்த யோசனையை மகேஷ்பாபு ஏற்றுக் கொண்டதுடன் நீங்களே ஒரு கிராமத்தை சொல்லுங்கள், அதனை நான் தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று ராமராவிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
ராமராவ் யோசனைப்படி மெகபூப் மாவட்டத்தில் உள்ள பாலமோர் கிராமத்தை மகேஷ்பாபு தத்து எடுத்திருக்கிறார். இதனைப் பற்றி மகேஷ்பாபு கூறும்போது "விரைவில் அந்த கிராமத்துக்கு சென்று கிராம மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பேன்" என்று உறுதி அளித்திருக்கிறார்.
தெலுங்கானா முதல்-மந்திரி அவர்கள் மகனின் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மகேஷ்பாபு, விரைவில் தனது தந்தை (நடிகர் கிருஷ்ணா) பிறந்த குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரி பாளையத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து தரவும் முடிவு செய்திருக்கிறார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும், நிருபர்களுக்கு பேட்டி அளிப்பதையும் தவிர்த்து வரும் நடிகர் மகேஷ்பாபு, முதல் முறையாக அரசின் கிராம ஜோதி திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மகேஷ்பாபு உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் தான்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!