Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எங்களை ஏமாத்திட்டிங்க அண்ணா.. துரோகம் பண்ணிட்டீங்க.. கதறிய நடிகர் மனோ பாலா!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் தங்களையெல்லாம் ஏமாத்திவிட்டு சென்றுவிட்டதாக நடிகர் மனோபாலா கதறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார்.
இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
கண்ணீர்
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
துக்கம் தொண்டையை அடைக்க
இந்நிலையில் எஸ்பிபியின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றில் அவரது நினைவு குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பேசவே முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க எங்களை ஏமாற்றிவிட்டார்.
ஏமாற்றிவிட்டார்
வந்து விடுவார் என நம்பியிருந்தோம் எங்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என கதறினார் மனோ பாலா. தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் மாஸ்க் அணிந்தப்படி கதறல் வீடியோவை வெளியிட்டுள்ளார் மனோபாலா.
எப்படி மனசு வந்துச்சு
அதிலும் அதையே பேசியுள்ள மனோபாலா எப்படி மனசு வந்துச்சு எங்களை விட்டுச்செல்ல என உருக்கமாய் கேட்டுள்ளார். மனோபாலா இயக்கத்தில் வெளியான படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். இருவரும் சகோதர பாசத்துடன் பழகி வந்துள்ளனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.