Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
எங்களை ஏமாத்திட்டிங்க அண்ணா.. துரோகம் பண்ணிட்டீங்க.. கதறிய நடிகர் மனோ பாலா!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் தங்களையெல்லாம் ஏமாத்திவிட்டு சென்றுவிட்டதாக நடிகர் மனோபாலா கதறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று மரணமடைந்தார்.
இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
கண்ணீர்
அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
துக்கம் தொண்டையை அடைக்க
இந்நிலையில் எஸ்பிபியின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான மனோபாலா கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊடகம் ஒன்றில் அவரது நினைவு குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பேசவே முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க எங்களை ஏமாற்றிவிட்டார்.
ஏமாற்றிவிட்டார்
வந்து விடுவார் என நம்பியிருந்தோம் எங்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். எங்களுக்கு துரோகம் செய்து விட்டார் என கதறினார் மனோ பாலா. தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் மாஸ்க் அணிந்தப்படி கதறல் வீடியோவை வெளியிட்டுள்ளார் மனோபாலா.
எப்படி மனசு வந்துச்சு
அதிலும் அதையே பேசியுள்ள மனோபாலா எப்படி மனசு வந்துச்சு எங்களை விட்டுச்செல்ல என உருக்கமாய் கேட்டுள்ளார். மனோபாலா இயக்கத்தில் வெளியான படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார் எஸ்பி பாலசுப்ரமணியம். இருவரும் சகோதர பாசத்துடன் பழகி வந்துள்ளனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.