Just In
- 9 min ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 37 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 58 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
Don't Miss!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன் மரணம்
சென்னை: பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.
பிரபல குணசித்திர நடிகரான மீசை முருகேசன் சென்னை வடபழனி குமரன் காலனி 9வது தெருவில் இருக்கும் பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 85 வயதான அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவர் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும், ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

முதலில் எம்.எஸ். விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் வாசிப்பார், பல்வேறு ஒலிகளை எழுப்புவார். பின்னர் அவர் நடிகர் ஆனார். விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். கடைசியாக அவர் சேரனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்தார்.
அவர் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். மேலும் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.