Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆர்ஜேவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்.. மிஸ்டர் லவ்வாக காதலர்களுக்கு டிப்ஸ்!
சென்னை: நடிகர் மொட்டை ராஜேந்திரன் நானும் சிங்கிள் தான் படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரி இன் ஏ என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. இந்த படத்தை இயக்குநர் ரா.கோபி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாகவும், தீப்தி திவேஸ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவை பாராட்டும் இசைக் கலைஞர்கள்... அழைக்கும் தீனா
மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் மிரட்டல் வில்லனாக வந்து மிரட்டினார். இதனை தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் காமெடி கேரக்டரிலும் வந்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் நானும் சிங்கிள் தான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அதாவது இந்தப் படத்தில் லண்டன் வாழ் தமிழராக உள்ள மொட்டை ராஜேந்திரன், ஆர்ஜேவாக நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி மிஸ்டர் லவ் என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் நபராக நடித்திருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். காதலுக்கு உதவி செய்வது, காதல் தோல்வியடைந்தவர்களை குஷிபடுத்துவது என கலக்கியிருக்கிறாராம் மனிதர்.