Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை
மலையாள நடிகர் முகேஷ், பிரபல தமிழ் நடிகை சரிதாவை காதல் திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் பெரும் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
இந்த நிலையில் முகேஷ் சமீபத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு நடிகை சரிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது சட்டவிரோதம் என்று புகார் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை பஞ்சாயத்துக்கு வந்து விட்டது. வழக்குத் தொடரவும் சரிதா முடிவு செய்துள்ளார்.
நேற்று பகலில் நடிகர் முகேஷ், ரகசியமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரை நிருபர்கள் பார்த்து விட்டனர். எதற்காக கமிஷனர் அலுவலகம் வந்தீர்கள்? என்று கேட்டபோது, சொந்த குடும்ப பிரச்சினை காரணமாக வந்திருப்பதாக சொல்லி விட்டு, அவர் வேகமாக கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.
அவர் வரதட்சணை ஒழிப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விவரம் எதையும் தெரிவிக்க, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மறுத்து விட்டார்.