Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எம்எல்ஏவைக் காணோம்... நடிகை சரிதாவின் மாஜி கணவர் முகேஷ் மீது போலீசில் புகார்
திருவனந்தபுரம்: கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் முகேஷைக் காணவில்லை என அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகரான முகேஷ். இவர் தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் ஜாதிமல்லி என்ற படத்தில் குஷ்பு ஜோடியாக நடித்தவர்.
அதுமட்டுமின்றி இவர் நடிகை சரிதாவின் மாஜி கணவர் ஆவார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் முகேஷ் - சரிதா ஜோடி சட்டப்பூர்வமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர்.
இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு முகேஷ் வெற்றி பெற்றார்.
ஆனால், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதோடு சரி, சமீபத்தில் கொல்லம் தொகுதியில் நாட்டு குண்டு வெடித்த சம்பவத்தின்போது அவர் தனது தொகுதிக்கு சென்று விசாரணை நடத்தவில்லை. அதோடு, முதல்வர் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் பகுதி எம்.எல்.ஏ.வைக் காணவில்லை என அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் கொல்லம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்டதாக கொல்லம் மேற்கு காவல் நிலைய போலீசார் ஒப்புகை சீட்டும் அளித்துள்ளார்.
ஆனால், சர்ச்சையைக் கிளப்பி விளம்பரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார் முகேஷ். கூடவே, தான் அடிக்கடி தொகுதிக்கு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.