Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலக சாம்பியன் பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ கார்... சாவி கொடுத்த நாகார்ஜுனா
சென்னை: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசளிக்கப்பட்டது. இதன் சாவியை நடிகர் நாகார்ஜுனா பி.வி.சிந்துவிடம் வழங்கினார். தான் பி வி சிந்துவின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் நடந்த உலக ஏஸ் பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதனையடுத்து, பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க சில படநிறுவனங்கள் போட்டி போட்டன.
அந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு சமந்தாவை விட தீபிகா படுகோனே மிகப்பொருத்தமானவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்!
உலக சாதனை வீரர்கள்
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளராரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான வி.சாமுண்டேஸ்வர்நாத், உலக அளவில் சாதனை படைக்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஆடம்பரமான கார்களை பரிசு அளிப்பது வழக்கம்.
தங்கம் வென்ற பி வி சிந்து
அதேபோல், தற்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். இதனை கவுரவிக்கும் விதமாக, சாமுண்டேஸ்வர்நாத், புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 மாடல் காரை இந்தியாவின் ஏஸ் பேட்மிண்டன் வீரர் பி.வி சிந்துவுக்கு வழங்கியுள்ளார்.
பி வி சிந்து
பி.வி.சிந்துவுக்கு பி.எம்.டபுள்யூ கார் வழங்கும் விழாவானது ஹைதராபாத்தில், நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாகார்ஜுனாவும் அழைக்கப்பட்டிருந்தார்.
சிந்துவின் ரசிகன்
இந்த நிகழ்ச்சியில், நாகார்ஜுனா பி.எம்.டபிள்யூ காரின் சாவியை பி.வி.சிந்துவிடம் அளித்து விட்டு பேசிய நாகார்ஜுனாநான் சிந்துவின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஏஸ் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும்போது நான் அமெரிக்காவில் போட்டியைப் பார்த்தேன். அவர் விளையாடிய விதத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என்று கூறினார்.
பிஎம்டபிள்யூ கார்
சாமுண்டேஸ்வர்நாத் இதுவரை விளையாட்டு வீரர்களுக்காக 22 கார்களைக் கொடுத்துள்ளார். அதில் பி.வி.சிந்து ஏற்கனவே நான்கு கார்களைப் பெற்றுள்ளார். இது அவர் செய்த சாதனைகளைக் காட்டுகிறது. நாகார்ஜுனா மற்றும் சாமுண்டேஸ்வர்நாத் ஆகியோரின் அன்பான பரிசளிப்புக்கு பி.வி.சிந்து நன்றி தெரிவித்ததோடு, வரும் போட்டிகளில் தொடர்ந்து நல்ல முறையில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேட்மிண்டன் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் பி.வி.சிந்துவின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.