Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கடன் வழக்கு-நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் நாசர்!
கடந்த 2006ம் ஆண்டு நாசர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு இந்தி படம் தயாரிப்பதாகக் கூறி ராமநாதன் என்பவர் என்னிடம் ரூ.50 லட்சம் கடனாகப் பெற்றார். ஆனால் படமும் எடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார், சைதாப்பேட்டை பெருநகர 11வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நாசர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தி படம் எடுக்க என்னிடம் ராமநாதன் பணம் வாங்கியிருந்தார். ஆனால் படம் எடுக்கவில்லை. எனது பணத்தை திருப்பி தரவும் இல்லை. இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நாங்கள் சமாதானமாக சென்று விட்டோம். எனவே ராமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார்.
இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.