Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கடன் வழக்கு-நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் நாசர்!
கடந்த 2006ம் ஆண்டு நாசர் சென்னை குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடந்த ஆண்டு இந்தி படம் தயாரிப்பதாகக் கூறி ராமநாதன் என்பவர் என்னிடம் ரூ.50 லட்சம் கடனாகப் பெற்றார். ஆனால் படமும் எடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார், சைதாப்பேட்டை பெருநகர 11வது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் ஸ்ரீராம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நாசர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தி படம் எடுக்க என்னிடம் ராமநாதன் பணம் வாங்கியிருந்தார். ஆனால் படம் எடுக்கவில்லை. எனது பணத்தை திருப்பி தரவும் இல்லை. இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நாங்கள் சமாதானமாக சென்று விட்டோம். எனவே ராமநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார்.
இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.