Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
தமிழ் சினிமாவுல அது இருக்கான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு.. பிரபல நடிகர் அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவில் குரூபிசம் இருப்பதாக நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசமும் வாரிசு அரசியலுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்ணீர் விட்டு கதறிய கிம் கர்தாஷியன்.. மீண்டும் கணவருடன் சேர்ந்தாச்சு.. வைரலாகும் புகைப்படங்கள்!
பெரும் பரபரப்பு
சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் வேலை பார்ப்பதாக கூறினார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசூல் பூக்குட்டி
அவரது கருத்துக்கு தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி பாலிவுட் இயக்குநரான சேகர் கபூரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஏஆர் ரஹ்மானை தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.
நடிகர் நட்டி
அடுத்தடுத்து பாலிவுட் சினிமா மீது எழும் குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் நெபோட்டிசம் குறித்து பேசியுள்ளார். நடிகர் நட்டி சதுரங்க வேட்டை, மிளகாய், நம்ம விட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குரூப்பிசம் இருக்கு
அதோடு தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஒளிபதிவாளராகவும் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நெப்போட்டிசம் குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என குறிப்பிட்டுள்ளார்.