Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ் சினிமாவுல அது இருக்கான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு.. பிரபல நடிகர் அதிரடி!
சென்னை: தமிழ் சினிமாவில் குரூபிசம் இருப்பதாக நடிகர் நட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசமும் வாரிசு அரசியலுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கண்ணீர் விட்டு கதறிய கிம் கர்தாஷியன்.. மீண்டும் கணவருடன் சேர்ந்தாச்சு.. வைரலாகும் புகைப்படங்கள்!
பெரும் பரபரப்பு
சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் வேலை பார்ப்பதாக கூறினார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசூல் பூக்குட்டி
அவரது கருத்துக்கு தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி பாலிவுட் இயக்குநரான சேகர் கபூரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஏஆர் ரஹ்மானை தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.
நடிகர் நட்டி
அடுத்தடுத்து பாலிவுட் சினிமா மீது எழும் குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் நெபோட்டிசம் குறித்து பேசியுள்ளார். நடிகர் நட்டி சதுரங்க வேட்டை, மிளகாய், நம்ம விட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குரூப்பிசம் இருக்கு
அதோடு தமிழ் மற்றும் இந்தி படங்களில் ஒளிபதிவாளராகவும் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நெப்போட்டிசம் குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என குறிப்பிட்டுள்ளார்.