Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இது ஆரம்பம்தான்.. இன்னும் இருக்கு.. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் பிரபல நடிகரின் மனைவி!
சென்னை: நவாசுதீன் சித்திக்கின் குடும்பம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அவரது மனைவியான ஆலியா அது வெறும் ஆரம்பம்தான் என எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல டிவிட்டியுள்ளார்.
பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். ஏற்கனவே இவரது முதல் மனைவி விவாகரத்து செய்த நிலையில் ஆலியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆலியா, நவாசுதீன் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி விவாகரத்து கேட்டு வருகிறார்.
மீண்டும் தலைப்பு செய்தியாகும் பிரபல நடிகரின் குடும்பம்.. பாலியல் தொல்லை கொடுத்தாக உறவு பெண் புகார்!
ஹாட் டாப்பிக்
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் இணைந்த அவர், நவாசுதீன் குடும்பத்தினர் குறித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை தெரியப்படுத்தப் போவதாக கூறினார். நவாசுதீன் - ஆலியா விவாகரத்து விவகாரம் தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
டிவிட்டரில் ஷேர்
இந்நிலையில் நவாசுதீனின் சகோதரர் தனது அண்ணன் மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நவாசுதீனின் மனைவி ஆலியா.
வெறும் ஆரம்பம்தான்
மேலும் இது வெறும் ஆரம்பம் தான். ஏற்கனவே இவ்வளவு ஆதரவை அனுப்பிய கடவுளுக்கு நன்றி. இன்னும் பல விஷயங்கள் வெளி வரும். பணத்தால் எவ்வளவு உண்மையயை வாங்க முடியும் என்றும் யாருக்கெல்லாம் அவர்கள் லஞ்சம் கொடுப்பார்கள் என்றும் பார்க்கலாம் என டிவிட்டியுள்ளார்.
பார்ப்போம்..
மற்றொரு டிவிட்டில் இந்த குற்றத்தை பார்த்துவிட்டு யார் அமைதியாக இருந்தார்கள் என்பதை காலம் சொல்லும்.
குற்றத்திற்காகவும், புகாரளிக்காததற்காகவும் இறுதியாக யார் தண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் யார் தப்பிக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். ஒரு குழந்தையின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை விட கவுரவமும் புகழும்தான் முக்கியமானதாகிவிட்டது. கொடுமை.. எந்த ஆதரவும் இல்லாமல் ஒரு குழந்தை தனக்க நிற்கவேண்டியதாயிற்று என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
பெரிய குற்றம்
குழந்தைகளுக்கு கவனிப்பும் ஆதரவும் தேவை. எந்த உதவியற்ற குழந்தையையும் யாரும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒவ்வொரு நபரும் குற்றத்தைப் புகாரளிக்கத் தவறியதற்காக தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நபர் அல்லது குடும்பத்தின் கவுரவத்தை பாதுகாக்க குற்றங்கள் குறித்து புகாரளிக்காதது ஒரு பெரிய குற்றம் என்றும் நவாசுதீன் சித்திக்கை சாடியுள்ளார் ஆலியா.