Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா? எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி!
சென்னை: நடிகர் நவாசுதீனிடம் 30 கோடி ரூபாய் பணமும் 4 பிஹெச்கே வீடும் விவாகரத்து செட்டில்மென்ட்டாக கேட்டதாக வெளியான தகவலை அவரது மனைவி ஆலியா மறுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் ரஜினிக்காந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான விவாகரத்து பிரச்சனைதான் இந்தி சினிமாவில் பெரும் சூடான விஷயமாக சென்று கொண்டிருக்கிறது.
நடிப்புக்கு பிரேக்.. படம் இயக்கப் போகும் பிரபல ஹீரோயின்.. லாக்டவுனில் 2 ஸ்கிரிப்ட் ரெடியாம்ல!

விவாகரத்து நோட்டீஸ்
நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஆலியா. கடந்த 7 ஆம் தேதி தனது வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீஸை நவாசுதீனின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்புக்கும் ஆலியாவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.

ஆண் நண்பருக்காக?
ஆனால் விவாகரத்து நோட்டீஸ் தொடர்பாக நவாசுதீனின் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் ஆலியா சித்திக் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. அவருடன் சேர்ந்து வாழவே ஆலியா, கணவர் நவாசுதீனிடம் இருந்து விவாகரத்து கேட்பதாக தகவல் வெளியானது.

பொய்யான குற்றச்சாட்டு
ஆனால் இதனை மறுத்த ஆலியா தனக்கு எந்த ஆணுடனும் தவறான தொடர்பும் இல்லை என்றார். மேலும் யாரோ ஒருவரை காப்பாற்ற தன் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை அபாண்டமாக தன் மீது கூறுவதாக கூறினார். மேலும் நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த அதிர்ச்சி உண்மைகளை கூறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

30 கோடி ரூபாய்
இந்நிலையில் ஆன்லைனில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஆலியா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸின் காப்பி என குறிப்பிடப்பட்டிருந்த அதில், விவாகரத்து தீர்வுக்காக நடிகர் நவாசுதீனிடமிருந்து ஜீவனாம்சமாக 30 கோடி ரூபாய் பணம் மற்றும் 4 பிஹெச்கே பிளாட் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் வதந்தி
மேலும் 2 நிலையான வைப்புத்தொகையாக 20 கோடி ரூபாய் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்காக ஆலியா கேட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை முற்றிலும் மறுத்துள்ளார் ஆலியா. இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அவை எல்லாம் வெறும் வதந்தி. அந்த அறிக்கைகள் புனையப்பட்ட நகல் என தெரிவித்துள்ளார்.
|
நிறைய வெளிப்படும்
ஊடங்களில் இருந்து நான் அனுப்பிய நோட்டீஸின் காப்பி இருப்பதாக கூறி எனது வழக்கறிஞர்களுக்கு போன் கால்கள் வருகின்றன. சரிபார்க்கப்பட்டதில் அந்த அறிக்கை ஒரு" புனையப்பட்ட நகல் "என்று தெரிகிறது. இதற்குப் பின்னால் யார் இருப்பார்கள்? ஒருவரை அவமானத்திலிருந்து காப்பாற்ற செய்யும் முயற்சி என வெளிப்படையாக தெரிகிறது இப்போது நிறைய வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.